என்கவுன்ட்டர் கூடாது என்பதுதான் விசிகவின் நிலைப்பாடு: திருமாவளவன் தகவல்


திருமாவளவன்

அரியலூர்: என்கவுன்ட்டர் கூடாது என்பதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். அரியலூர் மாவட்டம் அங்கனூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

மரண தண்டனை கூடாது என்பதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கையாகும். சட்டப்பூர்வமாக விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் ஒருவருக்கு மரண தண்டனை கொடுப்பதற்கு பதிலாக ஆயுள் தண்டனையாக வழங்கலாம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஒருவர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளார். பொதுவாக என்கவுன்ட்டர் கூடாது என்பது எங்களது நிலைப்பாடு.

தமிழகத்துக்கு உரியநீரை திறந்து விட வேண்டும் என இண்டியா கூட்டணி சார்பில் கர்நாடக காங்கிரஸ் அரசிடம் வலியுறுத்துகிறோம். தமிழக அரசே அதை பார்த்துக் கொள்ளும்என வேடிக்கை பார்க்கக்கூடிய நிலையில் மத்திய அரசு இருக்க கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x