தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார்!


சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவி மற்றும் பேரனுடன் 5 நாள் பயணமாக டெல்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.

தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வருகை தந்தார். அவருடன் அவரது மனைவி மற்றும் பேரன் ஆகியோரும் உடன் வந்தனர். 5 நாள் பயணமாக டெல்லி செல்லும் ஆளுநர், அங்கு குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆளுநர் டெல்லி செல்லும் போது, விமான நிலையத்தில் உள்ள பழைய முக்கிய பிரமுகர்கள் வாயில் வழியாக உள்ளே செல்வது வழக்கம். அரசாங்க ரீதியான பயணங்களின் போது, பாதுகாப்பு கருதி அவர் இந்த பாதையில் செல்வது வழக்கம். இன்று காலை அவரது பேரனுடன் வருகை தந்ததால், முக்கிய பிரமுகர்களுக்கான வழியை தவிர்த்து 2வது உள்நாட்டு முனையம் வழியாக ஆளுநர் விமான நிலையத்திற்குள் சென்றார்.

ஆளுநர் விமான நிலையம் வருகையை ஒட்டி, விமான நிலையம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆளுநருடன் அவரது பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் சென்றனர்.

x