குன்றக்குடி அடிகளாரின் 100-வது பிறந்தநாள்: அரசு விழாவாக கொண்டாட்டம்


சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே குன்றக்குடியில் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 100-வது பிறந்த நாள் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் குன்றக்குடி அடிகளார் அருளாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சிக்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார், மாங்குடி எம்எல்ஏ- ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், அவரது அருளாலயத்தில் உள்ள பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் குன்றக்குடி அடிகளார் கலந்துரையாடிய புகைப்படத் தொகுப்பையும் பார்வையிட்டனர்.

தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை, மாவட்ட செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர் ராஜசெல்வன், திருப்பத்தூர் வட்டாட்சியர் மாணிக்கவாசகம், மாவட்ட கவுன்சிலர் மஞ்சரி, ஒன்றியக் கவுன்சிலர் மருதுபாண்டி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

x