நாளை திமுக மாவட்ட அவசர செயற்குழு கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு @ குன்றத்தூர்


அமைச்சர் தா.மோ.அன்பரசன் | கோப்புப்படம்

குன்றத்தூர்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடுவது குறித்து குன்றத்தூரில் நாளை (மே 20) திமுக மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நாளை 20ம் தேதி திங்கள்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் குன்றத்தூர் செங்குந்தர் திருமண மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா அரங்கில் மாவட்ட அவை தலைவர் த.துரைசாமி தலைமையில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடுவது சம்பந்தமாகவும் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடைபெறும். இதனால் கூட்டத்தில் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்கள், கழக அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.

x