வேதாரண்யம் : ஆளில்லா இலங்கைப் படகு கரை ஒதுங்கியதால் பரபரப்பு!


வேதாரண்யத்தில் ஆளில்லா இலங்கைப் படகு கரை ஒதுங்கியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆளில்லா இலங்கை படகு ஒன்று கரையொதுங்கிய நிலையில் அதனை கைப்பற்றிய கடலோரக் காவல் படை போலீஸார் அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேதாரண்யத்தை அடுத்த சிறுதலைக்காடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த இராமானுஜம் உள்ளிட்ட 8 மீனவர்கள் இன்று அதிகாலை அந்தப் பகுதி கடலோரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது வலையில் கவிழ்ந்த நிலையில் இருந்த படகு ஒன்று சிக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படகினை மீனவர்கள் தங்களின் படகுடன் கட்டி கரைக்கு இழுத்து வந்தனர். இது குறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸார் படகை கைப்பற்றி அது யாருடையது, அதில் யார் வந்தார்கள், வந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

x