சென்னை - திருநெல்வேலி ரயில் உள்பட 4 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு


சென்னை: தெற்கு ரயில்வேயில் பயணிகளுக்கு தேவை அதிகமாக உள்ள வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து தொடர்ந்து இயக்க அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் உள்பட 4 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூர் - திருநெல்வேலிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்புரயில் (06069), ஜூலை 5-ம் தேதி முதல்ஜூலை 19-ம் தேதி வரை வெள்ளிக்கிழமை களில் 3 சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி - சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06070), ஜூலை 4முதல் ஜூலை 18 வரை வியாழக்கிழமைகளில் 3 சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி - மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (16030), ஜூலை 7-ம்தேதி முதல் ஜூலை 28-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் 4 சேவைகள் நீட்டிக்கப்பட் டுள்ளன.

மேட்டுப்பாளையம் - திருநெல் வேலிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06029) ஜூலை 8-ம் தேதி முதல் ஜூலை 29-ம் தேதிவரை திங்கள்கிழமைகளில் 4 சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.