கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழான 25% இடஒதுக்கீட்டில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகளை கொண்டுவர இயலாது: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்


சென்னை: கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத் தின் கீழான 25 சதவீத இடஒதுக்கீட்டில் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்பள்ளிகளை கொண்டுவர இயலாதுஎன தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத் தின் கீழ் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப் பிக்கும்போது பள்ளியில் இருந்துஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கவில்லை எனக்கூறி பள்ளி நிர்வாகங்கள் விண்ணப்பங்களை நிராகரித்து வருவதாகக்கூறி கோவையைச் சேர்ந்த ஈஸ்வரன்என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக்ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,மனுதாரர் தரப்பில் ஆஜரான சண்முகசுந்தரம், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கவில்லை எனக்கூறி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது தவறு. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றமே ஏற்கெனவே உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

ஆந்திராவிலும் இதுசம்பந்தமாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் வழங்கப்படும் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகளையும் சேர்க்க வேண்டும். இதுதொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்குதான் உள்ளது என வாதிட்டார்.

அதற்கு பதிலளித்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான மாநிலஅரசு ப்ளீடர் எட்வின் பிரபாகர், மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகளுக்கு மாநில அரசின் கட்டண நிர்ணயக் குழு கட்டணங்களை நிர்ணயித்து, அதன் அடிப்படையில், 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தி வருகிறது.

ஆனால் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ் பள்ளிகளுக்கு மாநில அரசின் கட்டண நிர்ணயக்குழு கட்டணங்களை நிர்ணயிக்க இயலாது என்பதால் இந்த பள்ளிகளை 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் கொண்டுவர இயலாது.

தமிழகத்தில் தற்போது ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் ஒரு அரசு தொடக்கப் பள்ளியும், மூன்று கிலோ மீட்டர் இடைவெளியில் அரசுநடுநிலைப் பள்ளியும், தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் உள்ளனர் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 25 சதவீத ஒதுக்கீடு காரணமாக அரசுக்கு அதிக நிதிச்சுமை உள் ளது, என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், இந்தவழக்கில் தமிழக அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 18-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.