புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக பொன்னேரியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்


திருவள்ளூர்: இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களுக்குப் பதிலாக புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது. அந்த 3 சட்டங்களும் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய 3 சட்டங்களுக்கு எதிராக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார்பு நீதிமன்றம் முன்பு இன்று காலை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் காளமேகம் உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்று, கோரிக்கை முழக்கமிட்டனர்.