கீழடியில் ‘தா’ என்ற தமிழி எழுத்துடன் கூடிய பானை ஓடு கண்டெடுப்பு


கீழடி அகழாய்வில் கண்டுஎடுக்கப்பட்ட, தமிழி எழுத்துடன் கூடிய பானை ஓடு.

திருப்புவனம்: கீழடியில் சமீபத்தில் தொடங்கிய 10-ம் கட்ட அகழாய்வில் தமிழி எழுத்துடன் கூடிய பானை ஓடு கண்டெடுக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் நடைபெற்ற அகழாய்வு மூலம்2,600 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரிகம் கண்டறியப்பட்டது. ஏற்கெனவே 9 கட்ட அகழாய்வுப்பணிகள் மூலம் பல்லாயிரம் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

பத்தாம் கட்ட அகழாய்வுப் பணியை ஜூன் 18-ம் தேதிகீழடி, கொந்தகை ஆகிய2 இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்துகாணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து, கீழடியில் 2 குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 'தா' என்ற தமிழி எழுத்துடன் கூடிய பானை ஓடு கண்டெடுக்கப்பட்டது. மேலும், அந்த எழுத்துக்கு அடுத்துள்ள எழுத்து இருக்க கூடிய பானை ஓடும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். ஏற்கெனவே, பல வண்ணங்களில் கண்ணாடி மணிகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.