கரூர்: உலக யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜகவினர்


உலக யோகா தினம்

கரூர்: கரூர் வடக்கு மாநகர பாஜக சார்பில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த உலக யோகா தின நிகழ்ச்சியில் பாஜகவினர் பங்கேற்றனர்.

கரூரில் உலக யோகா தின விழா இன்று (ஜூன் 21ம் தேதி) நடைபெற்றது. உலக யோகா தினத்தையொட்டி கரூர் வடக்கு மாநகர பாஜக சார்பில் கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமை வகித்து யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து நிகழ்ச்சியில் பங்கேற்று யோகாசனங்கள் செய்தார்.

வடக்கு மாநகர தலைவர் வடிவேல் வரவேற்றார். மாநில பிரச்சார அணி நிர்வாகி ராஜேஷ், கரூர் வடக்கு நகரம் செல்வன், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள், பாஜகவினர் கலந்து கொண்டு யோகாசனங்களை செய்தனர்.