கள்ளச்சாராய விவகாரத்துக்கு அரசின் அலட்சியமே காரணம் - ஜி கே வாசன் குற்றச்சாட்டு 


ஜி.கே.வாசன் | கோப்புப் படம்

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் எவ்வித கட்டுப்பாடும் இன்றி கிடைக்கிறது. இது அரசின் அலட்சியத்தையே வெளிக்காட்டுகிறது என தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய அருந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிப்புக்கு உள்ளானவர்களை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய ஜி.கே.வாசன் கூறுகையில்: "கள்ளச்சாராயம் எவ்வித கட்டுப்பாடும் இன்றி கிடைக்கிறது. இது அரசின் அலட்சியத்தை வெளிக்காட்டுகிறது.

இந்த கள்ளச்சாராய சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை அரசு கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.