உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்


சென்னை: கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இருமுறை கணினி வழியில் நடத்தப்படும். அதன்படி, இந்தாண்டு முதல்கட்ட நெட் தேர்வு, வரும் ஜூன் 16-ம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.

கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தொடங்கிய நெட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு,மே 15-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் /ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல, விண்ணப்பங்களில் மே 21 முதல் 23-ம் தேதிவரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம்,பாடத் திட்டம் உட்பட கூடுதல்தகவல்களை www.nta.ac.in எனும்இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும், ஏதேனும்சந்தேகம் இருப்பின் 011-69227700 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது

x