விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக: ப.சிதம்பரம் விமர்சனம்


சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பது என்ற முடிவை அதிமுக எடுத்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரின் (பாமக) வெற்றி வாய்ப்பை எளிதாக்க வேண்டும் என்று ‘மேலிட’ உத்தரவு அக்கட்சிக்கு வந்துள்ளது என்பதற்கு அக்கட்சி எடுத்துள்ள இந்த முடிவே தெளிவான சான்றாகும்.

தங்களுக்குப் பதிலாக பாமகவை நிறுத்தி, பாஜகவும் அதிமுகவும் சேர்ந்து திமுகவுக்கு எதிராக இத்தேர்தலில் போட்டியிடுகின்றன. எனவே, திமுக வேட்பாளர் அமோக வெற்றி பெறுவதை இண்டியா கூட்டணி உறுதி செய்ய வேண்டும் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

x