ரேஷன் கடைகளுக்கு இன்று, ஜூலை 20 விடுமுறை


கோப்புப்படம்

சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான பதிவு பணிக்காக விடுமுறை நாட்களில் ரேஷன் கடைகள் இயங்கியதற்காக, இன்று (ஜூன் 15) மற்றும் ஜூலை 20-ம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்படுவதாக உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் ஹர் சகாய் மீனா அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்காக கடந்தாண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, விண்ணப்ப விநியோகம் மற்றும் பதிவு உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. ஆதார் அடிப்படையில் பதிவு நடைபெற்றதால், ரேஷன் கடைகளில் இருந்த விரல்ரேகை பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.

இதுதவிர, சிறப்பு முகாம்கள் நடைபெற்ற நேரத்தில், ரேஷன்கடைகளுக்கான விடுமுறை தினங்களான, கடந்தாண்டு ஜூலை 23-ம் தேதி, ஆகஸ்ட் 4-ம் தேதி ஆகிய இரு தினங்கள், ரேஷன் கடைகள் இயங்கின. அப்போதே, இதற்கு பதில் விடுமுறை அளிக்கப்படும் என்றுஉணவுப்பொருள் வழங்கல்ஆணையரால் தெரிவிக்கப்பட் டிருந்தது.

இந்நிலையில், தற்போது அந்த இரண்டு நாட்களுக்குப் பதிலாக, இன்று (ஜூன் 15), ஜூலை 20-ம் தேதி விடுமுறை நாட்களாக அறிவித்து உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

x