2 மாத மீன்பிடி தடைக்காலம் நிறைவு: உற்சாகமுடன் கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள்


ராமேசுவரம்: தமிழகத்தின் கிழக்கு கடற்கைரப் பகுதிகளில் 2 மாத கால மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் உற்சாகமாக கடலுக்குச் சென்றனர்.

மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில்கொண்டு, கடந்த ஏப். 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் தமிழகத்தின் கிழக்கு கடற்கைரையெயாட்டிய கடல் பகுதியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. மீன் வரத்து குறைந்ததால்,மீன்கள் விலை அதிகரித்தது.

மீன்பிடித் தடைக்காலம் நேற்று இரவுடன் நிறைவடைந்த நிலையில், நேற்று மாலையில் இருந்தே திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உட்பட 14 மாவட்டங்கைளச் சேர்ந்த மீனவர்கள், 15,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்குச் சென்றனர். இவர்கள் ஞாயிற்றுக்கிழைம அதிகாலை முதல் கரை திரும்பத் தொடங்குவார்கள். அப்போது மீன் வரத்து அதிகரித்து, விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மீன்களுக்கு உரிய விலையை கொள்முதல் நிறுவனங்கள் நிர்ணயிக்க, அரசு உத்தரவிட வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீன்வளத்துறை எச்சரிக்கை 18 வயதுக்கு மேற்பட்ட மீனவர்கள் மட்டுமே கடலுக்குச் செல்ல வேண்டும். வெளிமாநிலத்தைச் சேர்ந்த மீனவர்களை அழைத்து செல்லக் கூடாது. விசைப்படகுகள் இந்திய கடல் எல்லையை தாண்டி சென்று மீன்பிடிக்கக் கூடாது.

மீனவர் அடையாள அட்டை, படகுப் பதிவு உள்ளிட்ட ஆவணங்களின் நகல்கைள வைத்திருக்க வேண்டும். உயிர்காப்பு உபகரணங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கைள கடலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது என்று மீனவர்களுக்கு தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

x