போட்டிக்கு தயாராகும் ஜல்லிக்கட்டுக் காளைகள்!


பொங்கல் வருகிறதென்றாலே ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுக் காளைகளுக்கும் கொண்டாட்டம் தான். அந்தக் காளைகளை வளர்ப்பவர்களோ அதைவிட கொண்டாட்டமாகி விடுவார்கள். ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு களத்தில் தங்களுக்கு பெருமை தேடித்தரும் காளைகளை தயார்படுத்த ரெடியாகிவிடுவார்கள்.

வேலூர் மாவட்டத்திலும் பொங்கல் பண்டிகைக்காக எருது விடும் விழா, மஞ்சுவிரட்டு ஆகிய விழாக்கள் களைகட்டும். இதற்காக வேலூர் அடுத்த சோழவரம் கிராமத்தில், இளைஞர்கள் தங்களது காளைகளுக்கு இப்போதே பயிற்சியளித்து அவற்றைப் போட்டிக்கு தயார்படுத்தி வருகிறார்கள்.

x