தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; பொங்கல் போனஸ்!


மு.க.ஸ்டாலின்

தமிழக அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கான அகவிலைப்படி 17 சதவீதமாக இருந்தது. அது 31 சதவீதமாக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். மேலும், சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்களுக்கு ரூ.1000-ம், ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500-ம் பொங்கல் பரிசாக வழங்கப்படுகிறது.

அதேபோல், அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை ஜனவரி முதல் தேதியிலிருந்து 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார் முதல்வர். அகவிலைப்படி உயர்வு மற்றும் பொங்கல் போனஸ் வழங்க ரூ.8,894 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

x