சல்வதோர் டாலி- பிறப்பு 11.05.1904 இறப்பு 23.01.1989


மிகவும் நிஜமானது என்று இந்த உலகத்தை நாம் உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறோம். கனவுலகத்தைவிட அது பெரிய மாயை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் நாளும் வரும்!

- சல்வதோர் டாலி

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஓவியர்களுள் ஒருவர் டாலி. ஸ்பெயின் நாட்டின் ஃபிகரெஸ் நகரத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் டாலி. பிரெஞ்சு சர்ரியலிஸ இயக்கத்தின் தொடர்பு காரணமாக, டாலியின் ஓவியங்களில் சர்ரியலிஸம் பெரும் தாக்கம் செலுத்தியது. ஆழ்மனதில் தோன்றும் விசித்திரமான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டவைதான் சர்ரியலிஸ ஓவியங்கள். இந்தப் பாணி ஓவியத்தில் டாலி அளவுக்கு உலகப் புகழ் பெற்றவர்கள் வேறு யாரும் கிடையாது.

தலைசிறந்த படைப்புகள்:

x