தூரிகையால் மிளிரும் என் தாய்த் தமிழே!


திரையில் விரிந்த  பிரம்மாண்டத்தால் ரசிகர்களை வாய் பிளக்க வைத்த ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ படங்களின் வெற்றிக்கு பங்களித்தவர்களில் ஒருவர் விஸ்வநாத் சுந்தரம்.  ‘பாகுபலி’ படங்களின் முக்கியக் காட்சிகளுக்காக, பிரம்மாண்டமான உருவங்களை ஓவியங்கள் மூலம் உயிரூட்டியவர் இவர்தான்.

இவர் தற்போது, தமிழின் உயிரெழுத்துகளை தனது தூரிகையால்  மிளிர வைத்திருக்கிறார். ‘இந்தியன் 2’, ‘சங்கமித்ரா’,  சிவகார்த்திகேயன் - ரவிக்குமார் படம், அடுத்ததாக ராஜமவுலி இயக்கவுள்ள படம்,  பிரபாஸ் நடிக்கவுள்ள படம் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவரைச் சந்தித்து,  “தமிழுக்கு அணி சேர்க்கும் இந்த யோசனை தோன்றியது எப்படி?” என்றோம்.  

“உலகின் மிகச் சிறந்த மொழிகளில் நம் தாய் மொழி தமிழும் ஒன்று. நாம எதைப் பற்றியும்  தாய் மொழியில்தான் தீவிரமா சிந்திக்க  முடியும். அந்தச் சிந்தனைதான் முழுமை பெறும்.

இப்போ நம்ம தாய்மொழி மீதான ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் குறைஞ்சுட்டே இருக்கு. தமிழ் மொழி கடல் போன்றது. அதில் அறிவியல், கலாச்சாரம் எனப் பல விஷயங்கள் இருக்கு. உண்மையில், கல்லூரிப் படித்து முடிக்கும் வரை எனக்கும் தமிழ்  மீது பெரிய ஈடுபாடு இல்லை. திரையுலகில் பணிபுரியும்போதுதான், பலரும் நம் மொழியைப் பற்றி பேசுவதைக் கேட்டு வியந்தேன். அப்போதுதான் இந்த மொழிக்கு நம்ம ஏதாவது செய்யணுமேனு யோசிக்கத் தொடங்கினேன்.

x