பன்னீர்செல்வத்தின் பற்று


அதிமுக அரசு பாஜகவின் கைப்பாவையாகச் செயல்படுகிறது என்ற விமர்சனத்தைக் கடுமையாக எதிர்கொண்டுவரும் நிலையில், சமீபத்தில் ஒன்றுக்கு இரண்டு முறை திராவிடத்தைத் தூக்கிப்பிடிப்பதுபோல துணை முதல்வர் ஓபிஎஸ் பேசியது பலரையும் புருவத்தை உயர்த்தவைத்தது.

பெரியார் சிலை விவகாரத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்துக்கு பெரியாரின் பங்களிப்பு பற்றி விரிவாக இடம்பெற்றிருந்தது. அடுத்து பட்ஜெட் உரையில் திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை விளக்கி ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ கோஷ்டிகளுக்கு பதில் கொடுத்தார் பன்னீர்செல்வம். என்ன கணக்கு என்பதுதான் புரியவில்லை.

x