காவிரிக்காக கை கோர்த்த கழகங்கள்


ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் அது கானல் நீராகத் தொடர்கிறது.

இதையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக, திமுக உட்பட அனைத்து தமிழக உறுப்பினர்களும் இணைந்து வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரும் பதாகைகளை உயர்த்திப் போராடினர். தமிழகத்தில் பரம்பரை எதிரிகளைப் போல் செயல்படும் இரண்டு கட்சிகளும் காவிரி நீர் உரிமைக்காக ஒன்றிணைந்து போராடியது வரவேற்கத்தக்க நிகழ்வு. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கடந்த மாதம் முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில எதிர்கட்சி பங்கேற்றது நினைவுகூரத்தக்கது

x