நமக்குள் நல்லதோர் அலைவரிசை!


அன்பு வாசகர்களே... வணக்கம்!

இரண்டே வார்த்தைகளில் சொல்வதானால் - நம்பிக்கை பொய்க்கவில்லை! நமக்கான அலைவரிசையின் வெற்றி மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது!

எதிர்பார்த்தபடியே ‘காமதேனு’ முதல் இதழை அள்ளி எடுத்து உச்சி முகர்ந்திருக்கிறீர்கள். எதிர்பார்த்ததையும்விட அதிகமாகவே, தொலைபேசிப் பதிவுகள், மின்னஞ்சல்கள் மற்றும் கடிதங்கள் வாயிலாக முதல் இதழில் உள்ள நிறை – குறைகளை அலசி ஆராய்ந்து விமர்சனங்களை அனுப்பியிருக்கிறீர்கள்.

‘அச்சிலும் அளவிலும் காகிதத்தின் தரத்திலும் சர்வதேசத் தரத்தை எட்டிப் பிடித்திருக்கிறது’ என்பது ‘காமதேனு’ தொடர்பான பதிவுகளிலேயே அதிகமானோர் குறிப்பிட்டிருக்கும் பெருவாரியான பாராட்டு. உள்ளபடியே மனம் நெகிழ்ந்து போனோம். ‘கண்களைக் கவரும் ஓவியங்கள், அழகழகான புகைப்படங்கள், வரிசை கட்டும் பல்துறைசார் கட்டுரைகள், அந்தந்த வார முக்கிய நிகழ்வுகளின் சூடான அணிவகுப்பு...

x