ராஜா ரவி வர்மா: பிறப்பு 29.04.1848 இறப்பு 02.10.1906


கேரளத்தின் அந்நாள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பிறந்தவர். ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே இந்திய, ஐரோப்பிய ஓவிய மரபுகளில் ஆழமான தேர்ச்சிபெற்றுவந்த ரவி வர்மா, நவீனக் காலத்தின் மகத்தான இந்திய ஓவிய மேதைகளில் ஒருவராக உருவெடுத்தார். அவர் அளவுக்கு இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியிலும் பிரபலமான இந்திய ஓவியர்களைக் கண்டுபிடிப்பது அரிது.

புகழ்பெற்ற ஓவியங்கள்

கேரள அரச வம்சப் பெண் (இங்கே இடம்பெற்றிருப்பது), ஜடாயு வதம், விஸ்வாமித்திரரை மயக்குதல், மகாலட்சுமி, சரஸ்வதி, அன்னப் பறவையுடன் பேசும் சாகுந்தலை, சிந்தனையில் மூழ்கியிருக்கும் பெண், பழத்தை வைத்திருக்கும் பெண், அர்ஜுனனும் சுபத்திரையும், வறுமை, நாடோடிகள்.

எல்லோருக்குமான ஓவியர்

x