மனச்சோர்வைப் போக்கும் மந்திரம்!


நீரிழிவுநோயுடன் சிறுநீரகத்தின் செயல்பாட்டையும் இழந்து தவிக்கும் சித்தாளுக்கு வாரம் ஒருமுறை டயாலிசிஸ் செய்ய எத்தனை காலம்தான் வசதிப்படும்? சாலையோரக் கடைகளில் கண்டதையும் சாப்பிட்டு ஆட்டோ ஓட்டுபவருக்கு, இதயத்தில் மூன்று குழாய்களும் அடைத்துவிட்டது என்றால், அந்த அடைப்பை நீக்க ஸ்டென்ட்டோ, பைபாஸோ எது செய்தாலும் அவர் உயிர் மீளும்தான்.

ஆனால், அதற்கு மூன்று லட்ச ரூபாயை எங்கிருந்து கொண்டுவருவார்? ‘புகை உயிருக்குப் பகை’ என்று எத்தனை ஸ்லைடுகள் போட்டாலும், மூளைக்குள் ஏறாத விஷயம், மூன்று வாரங்களுக்கு ஒருமுறை கீமோதெரபி கொடுக்கும்போது, வீட்டையும் வயக்காட்டையும் விற்றுவிட்டு, கடைசிக்குக் கடைசியாக மனைவியின் தாலியையும் கந்துவட்டிக்கு அடகு வைக்கும்போதுதான் புகையின் வதை புரிகிறது சாமானிய விவசாயிக்கு.

இப்படி இந்தியாவில் 70 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொற்றா நோய்களின் பிடியில் சிக்கிக்கொண்டு விழி பிதுங்குவதையும், நோயிலிருந்து மீள வழி தெரியாமல் நோயோடு வாழப் பழகுவதையும் நடைமுறையில் காண்கிறோம். அதனால், நம் பாரம்பரிய மரபுகளை மறந்தது தவறு எனப் புரிந்து மீண்டெழும்போது, தொற்றா நோய்களுக்கும் விலங்கு பூட்ட முடியும்.

முதலில் இந்தப் பிரச்சினைகளுக்கான விஷ வேரைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

x