2025-ம்  ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார்: காசி விஸ்வநாதன் நம்பிக்கை


திருவாரூர்: திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா திருவாரூரில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ்அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறும்போது, “2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் தோனி விளையாட வேண்டும் என்ற ஆசை எங்களுக்கும் இருக்கிறது. ஆனால், அதுகுறித்து எங்களிடம் இதுவரை அவர், எதுவும் கூறவில்லை.

அக்டோபர் 31-ம் தேதிக்கு முன்னதாக கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அன்கேப்டு பிளேயர்ஸ் விதி தோனிக்காக கொண்டு வரப்படவில்லை. இது கடந்த பல ஆண்டுகளாகவே இருக்கிறது. சிஎஸ்கே அணியில் யார் யார் விளையாடுவார்கள் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. ஏலத்துக்கு பின்னரே அது தெரியவரும்” என்றார்.

x