நியூஸிலாந்துடன் டெஸ்ட் போட்டி: இந்திய அணிக்கு பும்ரா துணை கேப்டன்


ஜஸ்பிரீத் பும்ரா

புதுடெல்லி: நியூஸிலாந்துடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக ஜஸ்பிரீத் பும்ரா அறிவிக்கப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் 16 முதல் நவ.5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டனாக ஜஸ்பிரீத் பும்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்ப்ரீத் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வ ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், சர்பிராஸ் கான், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பேடல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.

மாற்று வீரர்கள்: ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

போட்டி அட்டவணை விவரம்: முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 16 - 20-ல் பெங்களூரு மைதானத்திலும், 2வது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24 - 28-ல் புனே மைதானத்திலும், 3வது டெஸ்ட் போட்டி நவம்பர் 1 - 5ல் மும்பை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

x