செப்.29-ல் கல்லூரி வாலிபால் சாம்பியன்ஷிப்


சென்னை: மாநில அளவிலான கல்லூரி வாலிபால் சாம்பியன்ஷிப் வரும் செப்டம்பர் 29-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை ராஜபாளையத்தில் உள்ள நாடார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. ஆடவர் பிரிவில் 25 அணிகளும், மகளிர் பிரிவில் 22 அணிகளும் கலந்து கொள்ளும் இந்தப் போட்டியை விருதுநகர் மாவட்ட வாலிபால் சங்கம் நடத்துகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான கோப்பை அறிமுக விழா சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தடகள சங்கத்தின் தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம், தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் நிர்வாகிகள் அர்ஜூன் துரை, மார்ட்டின் சுதாகர் மற்றும் சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் துணைத்தலைவர் செல்வகணேஷ், செயலாளர் ஸ்ரீகேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

x