‘ஓய்வு பெறுவது குறித்து இப்போது யோசிக்கவில்லை’ - மனம் திறக்கிறார் அஸ்வின்


சென்னை: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து இப்போது யோசிக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டராகத் திகழ்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். தற்போது வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் அஸ்வின் இடம்பெற்றுள்ளார்.

இதுகுறித்து யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அஸ்வின் கூறியதாவது: தற்போது வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளோம். இந்தத் தொடரை வெற்றியுடன் முடிப்போம். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து தற்போது என் மனதில் எந்த எண்ணமும் இல்லை. ஏனென்றால், இன்றைய நாளில் மட்டுமே நான் வாழ விரும்புகிறேன்.

நிச்சயம் ஒருநாள் இது போதும் என்று தோன்றும். அப்போது கிரிக்கெட்டிலிருந்து நான் ஓய்வு பெற்று விடுவேன். அப்போது நிச்சயம் அதை அறிவிப்பேன். இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.

x