புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் இஷான் கிஷன் சதம் விளாசல்


சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் திருநெல்வேலியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் மத்திய பிரதேசம் - ஜார்க்கண்ட் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று பேட் செய்த மத்திய பிரதேசம் அணி முதல் நாளில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய அந்த அணி 91.3 ஓவர்களில் மேற்கொண்டு ரன்கள் ஏதும் சேர்க்காமல் எஞ்சிய விக்கெட்களை இழந்தது.

ஜார்க்கண்ட் அணி தரப்பில் ஷுபம் சிங், சவுரப் சேகர் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். தொடர்ந்து விளையாடிய ஜார்க்கண்ட் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 84 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது. விகாஷ் விஷால் 38, சரண்தீப் சிங் 33, ஆதித்யாசிங் 33 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் 107 பந்துகளில், 10 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ரவி யாதவ் 11, மனிஷி 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 3 விக்கெட்கள் இருக்க 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஜார்க்கண்ட் அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

x