இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை ஆடியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.
அதேபோல் பாகிஸ்தானும் முந்தைய 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் அபார வெற்றியை பெற்றுள்ளது. ஆனால் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் இதுவரை ஃபார்முக்கு வரவில்லை.
இரு உலகக்கோப்பை போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக அவர் 15 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். கிரிக்கெட் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களுள் ஒருவரான அவர் எப்போது வேண்டுமானாலும் அதிரடியாக விளையாடி ரன் எடுக்கக்கூடியவர். வேகப்பந்துவீச்சாளர்களை அபாரமாக எதிர்கொண்டு வரும் பாபர் அசாம், கடந்த சில போட்டிகளில் ஸ்பின்னர்களுக்கு எதிராக திணறி வருகிறார்.
இதற்கு அந்த அணியில் நல்ல ஸ்பின்னர்கள் இல்லாததும் முக்கியக் காரணம். அந்த வகையில் இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னரான குல்தீப் யாதவை வைத்து பாபர் அசாமை வீழ்த்த ரோகித் சர்மா திட்டம் வைத்திருப்பார் என்று கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியிலேயே ஸ்டீவ் ஸ்மித் வந்த பின் உடனடியாக ஹர்திக் பாண்டியாவை அட்டாக்கில் கொண்டு வந்தார். அதுபோல் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிற்கு எதிராக இந்திய அணியின் குல்தீப் யாதவ் இதுவரை 18 பந்துகளை வீசி இருக்கிறார்.
அந்த 18 பந்துகளிலேயே குல்தீப் யாதவ் அவரை 2 முறை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் பாபர் அசாம் களமிறங்கினால் குல்தீப் யாதவ் அட்டாக்கில் கொண்டு வரப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று மகாளய அமாவாசை... இதைச் செய்தால் கடன் தொல்லைத் தீரும்!
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000... திட்டத்தை உடனே நிறுத்தச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
பேச மறுத்த காதலி... வெறித்தனமாய் 13 முறை கத்தியால் குத்திய காதலன்!
தங்கம் விலை அதிரடியாக உயர்வு... சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது!
இன்று வானில் வர்ணஜாலம்... நெருப்பு வளையத்திற்குள் நிகழப்போகும் அற்புதம்!