ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப்போட்டி: இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முறையீடு


ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப்போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தை முறையீடு செய்துள்ளார்.

இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார். ஆனால், 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக கூறி இறுதிப்போட்டிக்கு முன்பு அவரை தகுதிநீக்கம் செய்வதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. இதனால், அவரது பதக்க வாய்ப்பு பறிபோனது. இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் வினேஷ் போகத் 50 கிலோ மல்யுத்தத்தில் கடைசி இடம் பிடித்தார். இதனால் அவர் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவும் பெரும் சோகத்தில் மூழ்கியது.

இந்த நிலையில், ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் முறையீடு செய்துள்ளார். அதில், தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டியை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள வினேஷ் போகத், போட்டி நடத்தப்படவில்லை என்றால் தனக்கு வெள்ளிப்பதக்கம் தனக்கு வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார். அவர் முறையீட்டு மனு விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

x