இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு


விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா.

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி அடுத்த வாரம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 கிரிக்கெட், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

டி20 தொடர் வரும் 27-ம் தேதியும் ஒருநாள் போட்டித் தொடர் ஆகஸ்ட் 2-ம் தேதியும் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்.

ஒருநாள் போட்டி அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர், ஷிவம் துபே, ரியான் பராக், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.

x