இந்தியா- இலங்கை ஒருநாள் போட்டி: ரோகித் சர்மாவுடன் ரீ என்ட்ரியாகும் 2 வீரர்கள்


இந்தியா, இலங்கை இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மாவுடன் கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் களமிறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா, இலங்கை இடையேயான கிரிக்கெட் தொடர் ஜூலை 27-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 6 போட்டிகள் நடைபெறவுள்ளன. முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரும், அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டியும் நடைபெகிறது. இந்த தொடர் மூலம் இந்திய அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் தனது பயணத்தைத் தொடங்க உள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொடரில் இருந்து அவர் ஓய்வு எடுப்பார் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் விளையாட விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடரின் மூலம் ரோகித் சர்மாவுடன் கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்புகிறார்கள். இந்த இரண்டு வீரர்களும் இந்த டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படவில்லை.

தற்போது, ​​இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். ஆயினும் இந்த தொடரில் விராட் கோலி களமிறங்குவது சந்தேகம்தான். இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே இந்த இரண்டு வீரர்களும் இந்த தொடரில் இடம்பெற மாட்டார்கள். விராட் கோலி ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ஜஸ்பிரித் பும்ரா ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். எனவே, பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி அல்லது கலீல் அகமதுவுக்கு வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

x