பழநி: பழநி முருகன் கோயிலுக்கு உண்டியல் காணிக்கை மூலம் ரூ.5.50 கோடி கிடைத்துள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை மாதம் ஒரு முறையும், திருவிழாக் காலங்களில் இரு முறையும் எண்ணுவது வழக்கம்.
அதன்படி, கடந்த 2 நாட்களாக கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. துணை ஆணையர்கள் வெங்கடேஷ், ஹர்ஷினி, உதவி ஆணையர்கள் லட்சுமி, லட்சுமிமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி மாணவ, மாணவிகள், கோயில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், ரூ.5 கோடியே 50 லட்சத்து 94 ஆயிரத்து 743 ரொக்கம், தங்கம் 1547 கிராம், வெள்ளி 31,094 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 1207 கிடைத்துள்ளது.