பராமரிப்​பின்றி சீரழி​யும் திருக்​கழுக்​குன்றம் லட்சுமி தீர்த்​தகுளம்: பக்தர்கள் வேதனை


​திருக்​கழுக்​குன்​றத்​தில் பக்​தவச்​சலேஸ்​வரர் கோ​யில் கிழக்கு ராஜகோபுரத்​தின் ​முகப்பு பகு​தி​யில் அமைந்​துள்ள லட்​சுமி தீர்த்த குளம். | படம்​: ​முத்​துகணேஷ் |

செங்​கல்​பட்டு மாவட்டம் திருக்​கழுக்​குன்றம் ஆன்மிக நகரமாக விளங்கி வருகிறது. நகரைச் சுற்றி​லும் 15-க்​கும் மேற்​பட்ட தீர்த்த குளங்கள் அமைந்​துள்ளன. இவை பேரூராட்சி மற்றும் வேதகிரீஸ்​வரர் கோயில் நிர்வாக பராமரிப்​பில் உள்ளன. இந்நிலை​யில், தாழக்​கோ​யில் எனக்​ கூறப்​படும் பக்தவச்​சலேஸ்​வரர் கோயி​லின் கிழக்கு ராஜகோபுரத்​தின் எதிரே லட்சுமி தீர்த்தம் எனப்​படும் குளம் ஒன்று அமைந்​துள்ளது.

இக்குளம் பேரூராட்சி மற்றும் அறநிலை​யத்​துறை கோயில் நிர்​வாகம் என எந்த அரசுத் துறை​யின் பராமரிப்​பில் வருகிறது என்ற குழப்பம் பல ஆண்டு​களாக நீடித்து வருவதாக தெரி​கிறது. இதனால், குளத்​தின் பராமரிப்பு பணிகள் நடைபெற​வில்லை. கோடை வெப்​பத்​தி​லும் தண்ணீர் நிரம்பி காணப்​படும் குளத்​தின் கரையில் உள்ள முட்​புதர்களை அகற்றி, பராமரிக்க பேரூராட்சி முன்வர வேண்டும் என ​மக்கள் கோரிக்கை விடுத்​துள்ளனர்.

இதுகுறித்து, உள்ளூர் வாசிகள் கூறிய​தாவது: கடந்த பல ஆண்டுகளாக லட்சுமி தீர்த்த குளம் முட்​புதர்கள் மண்டி சீரழிந்து வருகிறது. குளத்தின் கரையில் உள்ள முட்​புதர்​களின் மறைவில் மது அருந்​துதல், கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. இக்குளத்​தின் கரையை கழிப்​பறையாக பயன்​படுத்தும் அவலம் ஏற்பட்​டுள்​ளது.

அதனால், நகரின் தூய்மை மற்றும் நிலத்தடி நீர்​மட்​டத்தை கருத்​தில் கொண்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி லட்சுமி தீர்த்த குளத்தை சீரமைக்க வேண்​டும். கரையை பலப்​படுத்தி நடைபயிற்சிக்கான நடைபாதை அமைத்து தரலாம் என்றனர்.

இதுகுறித்து, திருக்​கழுக்​குன்றம் பேரூராட்சி தலைவலர் யுவராஜ் கூறிய​தாவது: லட்சுமி தீர்த்த குளத்தை சீரமைப்​ப​தற்​காக, ரூ.1.35 கோடி​யில் திட்​டம​திப்​பீடு தயாரித்து, அடிப்படை கட்டமைப்பு மேம்​பாட்டு நிதியில் ஒப்புதல் வழங்கக் கோரி அரசுக்கு பரிந்​துரை செய்​யப்​பட்​டுள்​ளது. அதேபோல், தந்திரி​குளம் ரூ.60 லட்சம், நட்டு​வனார் குளம் ரூ.70 லட்சம் மதிப்​பில் சீரமைப்​ப​தற்காக அரசின் ஒப்பு​தலுக்கு பரிந்​துரை செய்​யப்​பட்​டுள்​ளது.

மேலும், வாணியம் தாங்கள் ஏரி, மங்கலம் பெரிய ஏரி ஆகிய​வற்றை நமக்கு நாமே திட்​டத்​தில் சீரமைக்க, திட்​ட ம​திப்​பீடு தயாரித்து அரசுக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளது. அரசின் ஒப்புதல் கிடைத்​ததும், லட்சுமி தீர்த்த குளம் உட்பட மேற்​கண்ட நீர் நிலைகள் அனைத்​தும் சீரமைக்​கப்​படும் என்றார்.

x