கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து அருள்பாலித்த அண்ணாமலையார்


​திரு​வண்ணா​மலை​யில் நேற்று கிரிவலம் சென்ற உண்ணா​முலை​யம்​மன்​ சமேத அண்ணாமலையார்.

திரு​வண்ணாமலை: கார்த்திகை தீபத் திரு​விழாவையொட்டி திரு​வண்ணா​மலை​யில் உண்ணா​முலை சமேத அண்ணா​மலை​யார் நேற்று கிரிவலம் சென்று பக்தர்​களுக்கு அருள்​பாலித்​தார்.

காவல் தெய்​வமான துர்கை அம்மன் உற்சவத்​துடன் திரு​வண்ணாமலை அண்ணா​மலை​யார் கோயில் கார்த்திகை தீபத் திரு​விழா கடந்த 1-ம் தேதி தொடங்​கியது. பிடாரி அம்மன், விநாயகர் உற்சவத்​தைத் தொடர்ந்து மூலவர் சந்நிதி முன்​புள்ள தங்கக் கொடிமரத்​தில் கடந்த 4-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்​றது.

இதையடுத்து 10 நாள் உற்சவம் ஆரம்ப​மானது. காலை மற்றும் இரவு நேரங்​களில் பல்வேறு வாகனங்​களில் பஞ்சமூர்த்திகள் மாடவீதி உலா வந்தனர். கடந்த 10-ம் தேதி மகா தேரோட்டம் நடைபெற்​றது. விநாயகர், முரு​கர், அண்ணா​மலை​யார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்​வரர் ஆகியோர் தனித்தனி தேர்​களில் பவனி வந்தனர்.

கார்த்திகை தீபத் திரு​விழா​வின் முக்கிய நிகழ்​வாகக் கடந்த 13-ம் தேதி மகா தீபம் ஏற்றப்​பட்​டது. அண்ணா​மலை​யார் கோயில் மூலவர் சந்நி​தி​யில் அதிகாலை 4 மணியள​வில் பரணி தீபமும், 2,668 அடி உயரமுள்ள பருவத மலை உச்சி​யில் மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்​பட்டன. 11 நாட்​களுக்கு (டிச. 23 வரை) மகா தீப தரிசனத்தை பக்தர்கள் காணலாம். ஜோதி பிழம்​பாகக் காட்சி கொடுத்த அண்ணா​மலை​யாரைக் குளிர்விக்​கும் வகையில், திரு​வண்ணாமலை ஐயங்​குளத்​தில் 3 நாள் தெப்ப உற்சவம் ஆரம்ப​மானது.

முதல் நாளான நேற்று முன்​தினம் இரவு சந்திரசேகரரும், நேற்று இரவு பராசக்தி அம்மனின் தெப்ப உற்சவம் நடைபெற்​றது. இன்று இரவு சண்டிகேஸ்​வரர் உற்சவம் நடைபெறுகிறது. இந்நிலை​யில், மலையே மகேசன் எனப் போற்றி வணங்கி 14 கி.மீ. தொலைவு கொண்ட அண்ணா​மலையை, சிறப்பு அலங்​காரத்​தில் எழுந்​தருளிய உண்ணா​முலை சமேத அண்ணா​மலை​யார் (பெரிய நாயகர்) நேற்று கிரிவலம் சென்று பக்தர்​களுக்கு அருள்​பாலித்​தார். அவருடன் பராசக்தி அம்மன் சென்​றார்.

கிரிவலப் பாதை​யில் சென்ற சுவாமிக்கு வழியெங்​கும் திரண்​டிருந்த பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்​பித்​தும், ‘அண்ணா​மலை​யாருக்கு அரோகரா’ என முழக்​கமிட்டும் வழிபட்​டனர். தை மாதம் 2-ம் தேதி மற்றும் கார்த்திகை தீபத் திரு​விழா என ஆண்டுக்கு இருமுறை அண்ணா​மலை​யார் கிரிவலம் செல்​வார் என்பது குறிப்​பிடத்​தக்​கது. 17 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத் திரு​விழா சண்டிகேஸ்​வரர் உற்சவத்​துடன் நாளை இரவு நிறைவடைகிறது.

கார்த்திகை தீபம், பவுர்ணமி மற்றும் ஞாயிற்றுக்​கிழமை விடு​முறை காரணமாக திரு​வண்ணா​மலை​யில் கடந்த 3 நாட்​களாக பக்தர்கள் கூட்டம் அலைமோ​தி​யது. மூன்​றாவது நாளாக நேற்றும் ஏராளமான பக்தர்​கள் கிரிவலம் சென்​றனர். மேலும், 4 மணி நேரம் ​காத்​திருந்து அண்ணா​மலை​யாரை தரிசனம் செய்​தனர்.

x