நாகூர் கந்தூரி விழாவுக்கு 45 கிலோ சந்தனக்கட்டை: அரசாணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!


அரசாணை வழங்கும் முதல்வர் ஸ்டாலின்

நாகூர் தர்கா சந்தனக்கூடு கந்தூரி விழாவுக்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகூர் தர்கா நிர்வாகிகளிடம் வழங்கினார்.

நாகூர் ஆண்டவர் தர்கா

தமிழ்நாடு வக்பு வாரியம் விடுத்த கோரிக்கையை ஏற்று ஆண்டுதோறும் வனத்துறை இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவுக்கு இலவசமாக மாநில அரசு வழங்கி வருகிறது. நாகூரில் உள்ள நாகூர் ஆண்டவர் எனப்படும் சாகுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் தர்காவில் கந்தூரி விழா சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை தமிழ்நாடு அரசு கட்டணமின்றி வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு நடைபெற்று வரும் கந்தூரி விழாவில் சந்தனக்கூடு வைபவத்தன்று பூசப்படும் சந்தனத்தை வழங்குமாறு நாகூர் தர்கா நிர்வாகம் தமிழக அரசு கேட்டுக் கொண்டிருந்தது. அதனையேற்று வழங்குவதற்கான அரசாணையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

நாகூர் ஆண்டவர் தர்கா

நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் அல்ஹாஜ் செய்யது காமில் சாஹிப் மற்றும் நாகூர் தர்கா தலைவர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் காதிரி ஹாசிமி மற்றும் அறங்காவலர்ஹாஜா நஜிமுதின் சாஹிப் ஆகியோரிடம் முதலமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்வில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


இதையும் வாசிக்கலாமே...

x