பவுர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!


விழுப்புரம்: தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள்தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் தெற்கு ரயில்வே, முன்பதிவில்லா சிறப்புரயில்களை நவம்பர் மாதம் வெள்ளி முதல் ஞாயிறு வரை இயக்குகிறது.

இதன்படி விழுப்புரத்திலிருந்து இரவு 9.15 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்புரயில் (வண்டி எண்.06145) செப்டம் பர் 20,21,22,27,28,29, அக்டோபர் 4,5,6,11,12,13,18,19,20, 25,26,27, நவம்பர் 1,2,3,8,9,10,15,16,17, 22,23,24 ஆகிய தேதிகளில் இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

எதிர்வழித்தடத்தில் திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3.30 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை -விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண்.06146) செப்டம்பர் 21,22,23, 28,29,30, அக்டோபர் 5,6,7, 12,13,14, 19,20,21, 26,27,28, நவம்பர் 2,3,4, 9,10,11,16, 17,18,23,24,25 ஆகிய தேதிகளில் காலை 5 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்தடையும்.

இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்கள் 12 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

x