இந்துக்களின் புனிதமான தினங்களில் ஆடி அமாவாசை முக்கிய பங்கு வகிக்கிறது. இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வருகிற அமாவாசை நாட்களில் பித்ருக்களுக்கு புனித ஸ்தலங்களில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகின்றது.
தமிழகத்தின் புண்ணிய ஸ்தலமாக விளங்கும் குற்றாலம் பேரருவியில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தன்று ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து செல்வது வழக்கமாக இருந்து வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக இன்று ஆடி அமாவாசை தினம் என்பதால் குற்றாலம் பேரருவியில் தண்ணீர் வரத்து மிக குறைவாக இருந்தாலும் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு நீண்ட வரிசையில் நின்று குளித்து அங்கு கூடியிருந்த வேத விற்பனர்களிடம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். மேலும், ராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, பாபநாசம், தாமிரபரணி நதிக்கரைகளில் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் அதிக அளவில் கூட்டம் பொதுமக்கள் குவிந்தனர்.