வைரல் வீடியோ... ஆஞ்சநேயர் அருள் வந்த பக்தர்; பரவசத்தில் ஆழ்ந்த பக்தர்கள்


ஆஞ்சநேயர் கோயிலில் அருள் வந்த வடமாநில வாலிபர்

திருப்பூரில் ஆஞ்சநேயர் சந்நிதியில் அருள் வந்து அனுமன் போல பாவனை செய்து இந்தியில் ஆஞ்சநேயர் சிலையுடன் பேசி தேங்காயை பற்களால் உறித்து வழிபட்ட பக்தரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் பொங்கலூர் ஊராட்சிக்குட்பட்ட அழகுமலை கோயில் பிரசித்தி பெற்ற முருகன் தலமாக இருந்து வருகிறது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தினந்தோறும் வெவ்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. கந்த சஷ்டி விழாவின் 4ம் நாளான நேற்று காரிய சித்தி ஆஞ்சநேயர் சந்நிதி முன்பு வட மாநில இளைஞர் ஒருவர் தரிசனம் செய்து கொண்டிருந்தார்.

ஆஞ்சநேயர் போல் தேங்காய்களை பல்லால் உறித்ததால் பரபரப்பு

அப்போது அவருக்கு அருள் ஏற்பட்ட நிலையில் ஆஞ்சநேயர் போலவே பாவனை செய்து ஆஞ்சநேயர் சிலையிடம் இந்தியில் பேசியவாறு பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட தேங்காய்களை தனது பற்களால் கடித்து உரித்தார்.

அனுமன் போலவே பாவனை செய்து அவர் தேங்காய்களை பற்களால் உறித்ததை கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டதோடு தங்கள் செல்போன்களில் படம் பிடித்து அந்த வடமாநில இளைஞரை பயபக்தியுடன் வழிபட்டனர்.

பக்தர்கள் பரவசத்துடன் ஜெய் ஸ்ரீராம் முழக்கம்

சிறிது நேரத்திற்கு பின்பு அந்த இளைஞர் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டே இயல்பு நிலைக்கு திரும்பினார். ஆஞ்சநேயர் போலவே பாவனை செய்த அந்த இளைஞரை கண்ட பக்தர்கள், ‘ஜெய் ஸ்ரீராம்’ என குரல் எழுப்பினர். இதனால் கோயில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x