திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா: நவ.17-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது!


திருவண்ணாமலை அண்ணாமலையார் - உண்ணாமுலை அம்மை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்

ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

நவம்பர் 17-ம் தேதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றம் நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து பத்து நாட்கள் தீபத் திருவிழா நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் நவம்பர் 23-ம் தேதி மகா தேரோட்டம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நவம்பர் 26 -ம் தேதி விழாவின் நிறைவு நாளன்று பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x