தங்கச்சி மடம் புனித தெரசாள் ஆலயத்தில் அன்பிய விழா!


தங்கச்சி மடம் புனித தெரசாள் ஆலயத்தில் நடைபெற்ற அன்பிய விழாவில் கலந்துகொண்டவர்கள்.

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே தங்கச்சி மடத்தில் உள்ள புனித தெரசாள் ஆலயத்தில் அன்பிய விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

தங்கச்சிமடம் புனித தெரசாள் ஆலயத்தில் இன்று நடைபெற்ற அன்பியம் விழாவிற்கு ஆலய பங்குத்தந்தை ஆரோக்கிய ராஜா விழாவிற்கு தலைமை வகித்தார். பங்குத் தந்தை செபஸ்தியான் கொடியேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். விழாயையோட்டி ஜெபமாலை, புகழ்மாலை, மறையுரை மற்றும் சிறப்புத் திருப்பலி ஆகியன நடைபெற்றது.

மேலும், இந்த அன்பிய விழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில் பொது மருத்துவம், பல் மருத்துவம், இயற்கை மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

x