காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடை காணிக்கை!


காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு திருவிழா காலங்களில் உற்சவத்தின் போது பயன்படுத்துவதற்காக சென்னையைச் சேர்ந்த தம்பதியர் தங்க முலம் பூசப்பட்ட வெள்ளிக்குடையை இன்று காணிக்கையாக வழங்கினர்.

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த விஜயகுமார்-நீரஜா தம்பதியர் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடையை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு இன்று காணிக்கையாக வழங்கினர்.

முன்னதாக இந்த தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடை காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிர்ஷ்டானங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. அதன்பிறகு அம்மனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது. இந்த குடை திருவிழாக்காலங்களில் பயன்படுத்தப்பட உள்ளது.

x