பெளர்ணமியும் வியாழனும் இணைந்திருக்கும் நன்னாளில், தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தைப் பாராயணம் செய்து குரு தட்சிணாமூர்த்தியை வணங்கி வழிபடுவோம். வளமும் நலமும் பெறுவோம். குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்குவார்கள்.
நவக்கிரகத்தில் உள்ள குரு பகவான், தேவர்களின் குருவான பிரகஸ்பதி. பிரம்மாவையும் குரு என்றே போற்றுகிறோம். விஷ்ணுவையும் குரு என்று வணங்குகிறோம். குருவுக்கெல்லாம் குருவாகத் திகழ்பவர் தட்சிணாமூர்த்தி. சிவபெருமானே குருவாக அமர்ந்து, சனகாதி முனிவர்களுக்கு கல்லால மரத்தடியின் கீழ் உபதேசித்து அருளுகிற வடிவம் தான் தட்சிணாமூர்த்தி என்கிறது சிவபுராணம்.
தட்சிணம் என்றால் தெற்கு என்று அர்த்தம். தெற்குப் பார்த்தபடி காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை நாம் வடக்கு நோக்கி நின்றபடி தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் மிகுந்த விசேஷமானது என்பதால் தான் இப்படியொரு அமைப்பை ஆகமங்கள் வைத்திருக்கின்றன.
குருவுக்கு உகந்தநாள் வியாழக்கிழமை. பெளர்ணமியும் சிவபெருமானையும் குருமார்களையும் வணங்குவதற்கு உரிய நன்னாள். வியாழக்கிழமையும் அப்படித்தான். சிவமே மலையெனத் திகழும் திருவண்ணாமலையில் பெளர்ணமி தோறும் கிரிவலம் வருவதும் அங்கே அமைந்திருக்கும் மகான்களின் ஆஸ்ரமங்களுக்குச் சென்று வழிபடுவதும் மிகுந்த விசேஷமாகப் போற்றப்படுகிறது.
குருவுக்கு உகந்த வியாழக்கிழமையில், குருவுக்கு உகந்த பெளர்ணமி நன்னாளில் சிவாலயத்தின் கோஷ்டத்தில் தென்முகமாக அருளியபடி இருக்கும் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சார்த்தி, தட்சிணாமூர்த்தி அஷ்டகம் பாராயணம் செய்து வேண்டிக்கொண்டால், குழந்தைகளுக்கு கல்விச் செல்வம் கிடைக்கும்; ஞானமும் யோகமும் பெற்று வாழலாம் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.
அகணித குணகணமப்ரமே மாத்யம்
ஸகல ஜகத் ஸ்திதி ஸம்யமாதி ஹேதும்!
உபரத மனோ யோகி ஹ்ருன் மந்திரம் தம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
என்று சொல்லி வணங்கிவிட்டு தொடர்ந்து தட்சிணாமூர்த்தி அஷ்டகம் பாராயணம் செய்வோம்.
நிரவதி ஸுக மிஷ்ட தாதாரமிட்யம்
நதஜன மனஸ்தாப பேதைக தக்ஷம்
பவ விபின தவாக்னி நாமதேயம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
த்ரிபுவனகுரும் ஆகமைக ப்ரமாணம்
த்ரிஜகத் காரண ஸூத்ர யோக மாயம்
ரவிசத பாஸ்வர மீஹீத ப்ரதானம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
அவிரத பவ பாவனாதி தூரம்
பத பத்மத்வய பாவிணாம் அதூரம்
பவ ஜலதி ஸுதாரணாங்கிரி போதம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
க்ருத நிலய மனிசம் வடாகமூலே
நிகம சிகாப்ராத போதிதைக ரூபம்
த்ருத முத்ராங்குஸி கம்ய சாருரூபம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
த்ருஹிண ஸுத பூஜிதாங்க்ரி பத்மம்
பத பத்மானத மோக்ஷதான தக்ஷம்
க்ருத குருகுலவாஸ யோகி மித்ரம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
யதிவரஹ்ருதயே ஸதாவிபாந்தம்
ரதிபதி சதகோடி ஸுந்தராங்க மாத்யம்!
பரஹித நிரதரத்மனாம் ஸுஸேவ்யம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
ஸ்மித தவள விகாஸிதான னாப்ஜம்
ஸ்ருதி ஸுலபம் வ்ருஷபாதிருட காத்ரம்
ஸித ஜலஜ ஸுசோப தேணா காந்திரம்!
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
வ்ருஷப க்ருதமிதம் இஷ்ட ஸித்திதம்
குருவர தேவ ஸந்திதௌ படேத்ய:
ஸகல துரித துக்க வர்க்க ஹசனிம்
வ்ரஜதி சிதம் ஞானவான் சம்புலோகம்!
இந்த தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தைப் பாராயணம் செய்யலாம் அல்லது ஒலிக்கவிட்டு காதாரக் கேட்டு மனதாரப் பிரார்த்தனை செய்யலாம். தடைகளையெல்லாம் தகர்த்து அருளுவார் குரு தட்சிணாமூர்த்தி.