சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு


சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு இன்று காலை நடை திறக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கிறார்கள். இது தவிர மாதம் முதல் நாளில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்படி ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஜூன் 14-ம் தேதி நடை திறக்கப்படுகிறது. முன்னதாக பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு இன்று காலை 5.30 மணியளவில் நடை திறக்கப்பட்டது.

x