சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஜூலை 3-ல் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம்


ஸ்ரீநடராஜர் கோயில்

கடலூர்: கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் வரும் ஜூலை 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் வரும் ஜூலை 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜூலை 4 ஆம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதிஉலா, 5-ஆம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 6-ஆம் தேதி வெள்ளி பூதவாகன வீதி உலா, 7-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச் சான்), 8-ஆம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 9-ஆம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, 10-ஆம் தேதி தங்க ரதத்தில் பிச் சாண்டவர் வீதி உலா நடைபெறவுள்ளது.

11-ஆம் தேதி தேர்த் திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெற வுள்ளன.12-ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாம சுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

தொடர்ந்து, காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறவுள்ளன.13-ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலாவும், 14-ஆம் தெப்ப உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் குழுச் செயலர் உ.வெங்கடேச தீட்சிதர், துணைச் செயலர் து.ந.சுந்தர தாண்டவ தீட்சிதர் மற்றும் உற்சவ ஆச்சார்யார் கு.கிருஷ்ணசாமி தீட்சிதர் ஆகியோர் செய்துள்ளனர்.