அமெரிக்காவில் புதிய அதிபராக ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றார். அதன்பின், அமெரிக்காவின் செலவுகளை குறைக்க டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தலைமையில் அரசு செயல்திறன் துறையை(டிஓஜிஇ) ட்ரம்ப் உருவாக்கினார்.
அவர் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியுதவிகளை ரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்தார். அதன்படி, இந்தியாவில் தேர்தலின் போது வாக்கு சதவீதத்தைஅதிகரிக்க ரூ.182 கோடி அமெரிக்கா வழங்கி வந்ததை ரத்து செய்வதற்கான நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டார். அப்போது அதிபர் ட்ரம்ப் கூறும்போது, ‘‘இந்தியாவிடம் நிறைய பணம் உள்ளது. அங்கு தேர்தலின் போது வாக்கு சதவீதம் அதிகரிக்க அமெரிக்கா ஏன் ரூ.182 கோடிவழங்க வேண்டும்? உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதனால் அமெரிக்க பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதில் சிக்கல் உள்ளது. பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அதேநேரத்தில் அந்த நாட்டு தேர்தலில்வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா ஏன் பணம் வழங்க வேண்டும்?’’ என்றார்.