மோடிக்கும் ராகுலுக்கும் நான்தான் நிஜ வில்லன்!- தெறிக்கவிடும் தேர்தல் மன்னன்


என்.சுவாமிநாதன்
 

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தின் அருகில் அமர்க்களமாய் தயாராகி வருகிறது அந்த அலுவலகம். உள்ளே இரண்டு எட்டு நடந்தாலே ஆபீஸ் முடிந்துவிடும். அந்த அறையைச் சுற்றிலும் கண்ணாடி பொருத்தி, ஏசி வைத்து தேர்தல் காரியாலயம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் நாகூர்மீரான் பீர்முகமது.

‘தேர்தல் மன்னன்’ என்று சொன்னால்தான் ஏரியாவாசிகளுக்கு இவரைத் தெரிகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தல் இவர் சந்திக்கப் போகும் 51-வது தேர்தல் களம். துணிந்து தொடர்ந்து சுயேச்சையாகப் போட்டியிட்டு வரும் இவர், இந்தத் தேர்தலில் மோடியையும் ராகுலையும் எதிர்த்து நிற்பதற்காக நாகர்கோவிலில் ஆபீஸ்(!) போட்டு வருகிறார். ஏகப்பட்ட ஆச்சரியங்களுடன் அவரைச் சந்தித்தேன்.

“இந்த ஆபீஸுல போட்டோ பிடிக்க இடம் சவுகரியப்படாது. பக்கத்துல சிவன் கோயிலுக்குப் பின்னாடி ஒரு குளம் இருக்கு. அதுக்குப் போற வழியில் லொக்கேஷன் நல்லா இருக்கும்; அங்க போவோமா?” என புகைப்படத்துக்கு ஏற்ற லொக்கேஷனைச் சொல்லும் நாகூர்மீரான் பீர்முகமது அடிப்படையில் புகைப்படக்காரர். அவர் சொன்ன இடத்துக்கே போனோம்.

x