ரசிகனுக்காக நடுரோட்டில் அமர்ந்த அஜித்!


கடந்த வாரம் டால்பின் குமார் கிரிக்கெட் ஆடியது முதல், டிக்டாக் சர்ச்சை வரை பல விஷயங்களை இணையதளத்தில் நெட்டிசன்கள் விவாதித்தார்கள். அதற்கெல்லாம் மத்தியிலும் அஜித்தின் ஒரு செயல் இணையத்தில் வைரலானது. ஏற்கெனவே அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சியில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. பயிற்சியின்போது தொடர்ந்து ரசிகர்களைத் தவிர்த்துவந்த அஜித், கடந்த வாரம் திடீரென்று ரோட்டிலேயே ரசிகர்களுடன் அமர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். “5 மணி நேரமாக காத்திருக்கிறோம், உங்களோடு ஒரே ஒரு போட்டோ” என்று ரசிகர்கள் கெஞ்ச, அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்த வீடியோவும் இணையத்தில் பரவி வைரலானது. இதைப் பகிர்ந்த பலரும் சிவக்குமாரையும் டேக் செய்து,  “பிரபலத்தின் முதிர்ச்சி இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று கலாய்த்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக தனித்து போட்டி. - தங்கதமிழ்செல்வன்

அந்தப் போட்டி எந்தக் கசாப்பு கடைல விக்குதுனு சொன்னீங்கனா குக்கர்ல சமைக்க வசதியா இருக்கும்.- அபிவீரன்

திருப்பூரில் கருப்புக் கொடி காட்ட வந்த மதிமுக-வினருக்கு அடி உதை. கடைக் குள் ஓடி ஒளிந்த வைகோ.

x