எம்.கபிலன்
நாகர்கோவிலில் பிறந்த பா.வனிதா ரெஜி டெல்லியில் வசிக்கிறார். இந்திய அரசின் கணினித் துறையில் விஞ்ஞானியாகப் பணிபுரியும் இவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறார். சமீபகாலமாக கவியரங்க மேடைகளிலும் காணக்
கிடைக்கும் வனிதாவுக்குப் பிடித்தவை பத்து இங்கே...
கவிதை: ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி. பதின்பருவ துவக்கத்தில் வாசித்த மற்றும் வியந்த முதல் கவிதைப் புத்தகம் என்பதால் கூடுதல் பிடித்தம்.